நீடாமங்கலம், பிப்.9: மன்னார்குடி தொகுதி வடக்கு, பேரூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நீடாமங்கலம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மன்னார்குடி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா தலைமை வகித்தார். தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் இந்திரஜித் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் ஒன்றியகுழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணிசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கானூர் ஆனந்து, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜானகிராமன், ரவிச்சந்திரன், பேரூர் இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ராம்ராஜ், பேச்சாளர் கருணாகரன், தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அப்பு வரவேற்றார். ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கோவில்வெண்ணி செல்வா நன்றி கூறினார்.